போக்குவரத்துக் கழகம் பற்றிய ஸ்டாலின் அறிக்கையில் தவறு உள்ளது.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
போக்குவரத்துக் கழக சீரமைப்பு பற்றிய ஸ்டாலின் அறிக்கையில் தவறு உள்ளது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
சென்னை: போக்குவரத்துக் கழக சீரமைப்பு பற்றிய ஸ்டாலின் அறிக்கையில் தவறு உள்ளது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
போக்குவரத்து கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்தாமல் மாநில அரசே நிர்வாகத்தை சீர் செய்வதற்கான அறிக்கையை ஸ்டாலின் தமிழக அரசிடம் சமர்ப்பித்தார். இதற்காக 27 பரிந்துரைகளை நேற்று முதல்வர் பழனிசாமியிடம் அளித்துள்ளார்.
இதற்காக குழு அமைக்கப்பட்டு குழு 2 வாரமாக ஆய்வு செய்து பின் அறிக்கையை அளித்துள்ளார். தற்போது இந்த அறிக்கையில் தவறு உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
அதன்படி ''போக்குவரத்துக் கழக சீரமைப்பு பற்றிய ஸ்டாலின் அறிக்கையில் தவறு உள்ளது. அறிக்கையில் புள்ளி விவரங்கள் தவறாக உள்ளது'' என்றுள்ளார்.
மேலும் ''பணிமனைகளை அடகு வைக்கும் கலாச்சாரத்தை திமுகதான் அமல்படுத்தியது. பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்த்தது திமுக. வெளிப்படையான டெண்டர் முறையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.