For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் கார்த்திகை தீப விழா: ஜொலித்த சன்னிதானம்- படிபூஜைக்கு 2030 வரை முன்பதிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சபரிமலையில் நேற்று மாலையில் தீபாராதனையின் போது விளக்குகள் ஏற்பட்டது. சன்னிதானத்தை சுற்றி கற்பூர தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் விளக்கேற்றி சரணகோஷ முழக்கமிட்டனர். இதபோல சபரிமலையில் உள்ள அலுவலகங்கள், கடைகள் அனைத்திலும் விளக்கேற்றப்பட்டிருந்தது.

சபரிமலையில் பதினெட்டாம் படி பூஜைக்கு 2030ஆம் ஆண்டுவரை முன்பதிவு முடிந்துவிட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டல பூஜை

மண்டல பூஜை

கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வரும் மண்டல பூஜை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் குவிந்து வருகின்றனர்.இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மண்டல பூஜை

மண்டல பூஜை

கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வரும் மண்டல பூஜை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் குவிந்து வருகின்றனர்.இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

கார்த்திகை தீபத் திருநாள், பவுர்ணமி, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுதலாக காணப்பட்டது.

ஜொலித்த சன்னிதானம்

ஜொலித்த சன்னிதானம்

கார்த்திகை தீபத்தை ஒட்டி ஏராளமான விளக்குகள் கோவிலில் ஏற்றப்பட்டன. இதனால் கோவில் சன்னிதானம் தீப ஒளியில் ஜொலித்தது. இதை காணவும், 18ஆம் படி ஏறவும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கோவிலில் பாதுகாப்பு

கோவிலில் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு நாளான இன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நேற்று காலை முதலே கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சன்னிதானம் மற்றும் 18ஆம் படி ஏறும் முன்பு பக்தர்கள் அனைவரும் பல கட்ட சோதனைக்குட்படுத்தப்பட்டனர். கமாண்டோ படை வீரர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.அவர்கள் துப்பாக்கிகளுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கட்டுபடுத்தப்பட்ட கூட்டம்

கட்டுபடுத்தப்பட்ட கூட்டம்

தீவிர பாதுகாப்பினை முன்னிட்டு நேற்றிரவு முதல் பக்தர்கள் கூட்டம் சற்று குறைய தொடங்கியது. இன்று காலையிலும் அது நீடித்தது. இன்று பிற்பகலுக்கு மேல் கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிபூஜை, உதயாஸ்தனமன பூஜை

படிபூஜை, உதயாஸ்தனமன பூஜை

சபரிமலை வரும் பக்தர்கள் ஐயப்பனுக்கு காணிக்கை செலுத்துவதோடு அங்கு நடக்கும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜைகளும் செய்வது உண்டு. படி பூஜைக்கு ரூ.40 ஆயிரமும், உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.25 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2030 வரை முன்பதிவு

2030 வரை முன்பதிவு

கோவில் நடைதிறந்திருக்கும் நாட்களில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை செய்ய கோவில் நிர்வாகத்திடம் பணம் கட்டி பக்தர்கள் முன் பதிவு செய்திருக்க வேண்டும். கோவிலின் இன்றைய நிலவரப்படி, சபரிமலையில் பக்தர்கள் படி பூஜை செய்ய வருகிற 2030-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம்தேதி வரை முன்பதிவு முடிந்து விட்டது. இனி பதிவு செய்பவர்கள் 2030 அக்டோபருக்கு பிறகுதான் படி பூஜை செய்ய முடியும்.

2022 வரை உதயாஸ்தமன பூஜை

2022 வரை உதயாஸ்தமன பூஜை

இதுபோல உதயாஸ்தமன பூஜைக்கு வருகிற 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம்தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த காலக்கட்டத்தில் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டால், அதற்கான கூடுதல் கட்டணத்தை பக்தர்கள் செலுத்தி படி பூஜை நிறைவேற்றி கொள்ளலாம் எனவும் கோவில் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

English summary
Thousands of devotees witnessed lighting of Karthigai deepam at Sabarimalai Ayyappa temple on Friday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X