"ஊழல்வாதிகள்" வரிசையில் நிற்க "ஏழைகள்" கொண்டாடுகிறார்கள்- மோடியை சீண்டிய ப. சிதம்பரம்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியை கிண்டலடித்துள்ளார் சிதம்பரம்.
சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கையை விமர்சித்து ட்விட்டரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது; வங்கிக்கு போனால் மை வைப்போம் என்ற அறிவிப்புகள் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் சமூக வலைதளவாசிகளின் படுபயங்கர கிண்டல்களுக்கும் இவை தப்பவில்லை.
தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தம்முடைய ட்விட்டரில் இவற்றை கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
அதில்,
- பணிபுரியும் மக்கள் பல பேர் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்- வாழ்க உற்பத்தி திறன்!
1. Millions of working people standing in queue. Long live Productivity
— P. Chidambaram (@PChidambaram_IN) November 15, 2016
- ஆயிரக்கணக்கான "பணக்கார" மற்றும் "ஊழல்வாதிகள்" வரிசையில் நிற்கின்றனர்... "ஏழைகள்" தங்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுகின்றனர்
2. Thousands of "rich" and "corrupt" persons standing in queue. The poor are cheering from their homes!
— P. Chidambaram (@PChidambaram_IN) November 15, 2016
- மக்களுக்கு வங்கிகளால் பணமே கொடுக்க முடியவில்லை- மோடியின் மிகச் சிறந்த நாள் இது
3. Banks are doling out cash to citizens. That is proof that "Achhe Din" have arrived!
— P. Chidambaram (@PChidambaram_IN) November 15, 2016
இவ்வாறு கிண்டலடித்துள்ளார் ப.சிதம்பரம்.