தாமிரபரணி தூய்மைப் பணி - பொது மக்களுக்கு நெல்லை கலெக்டர் அழைப்பு
நெல்லை மாவட்டத்தின் ஜீவ ஆறாக விளங்கும் தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப்பணியில் பொதுமக்களும் இணைந்துகொள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் அழைப்புவிடுத்துள்ளார்.
நெல்லை: நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆறை தூய்மை படுத்த பொது மக்களை கலெக்டர் அழைத்துள்ளார். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நெல்லையில் உள்ள வற்றாத ஜூவநதியான தாமிரபரணியைத் தூய்மைப் படுத்தும் பணியில் மீண்டும் ஈடுபட மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்தூரி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார். அப்போது அவர் பேசுகையில், " தாமிரபரணியைத் தூய்மைப் படுத்தும் பணி முதல் கட்டமாக கருப்பாத் துறை முதல் வடக்கு பைபாஸ் பாலம் வரை 4.85 கிமீ தூரம் வரை நடந்தது.

இதில் சுமார் 7 டன் குப்பை சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணியைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட தன்னர்வலர்கள், மாணவர்கள், மாணவிகள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தப் பணி பொது மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.
மேலும் ஆலோசனைக் கூட்டத்தில், தூய்மைப் பணியின் போது குறைபாடு காணப்பட்டால் அதை சரி செய்வதோடு சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது சுத்தம் செய்யப்பட்ட இடத்தை தொடர்ந்து பராமரித்து சுத்தமாக வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைப்பினர்களிடம் இருந்து கருத்துகள் கோரப்பட்டுள்ளது. குப்பைகளைத் தரம் பிரித்து எந்தெந்த இடத்தில் வைப்பது, எந்த இடத்தில் அதிக குப்பைகள் சேர்கிறது என்பதை கண்டறிவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவையான இடங்களில் கழிப்பறைகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய மாணவ, மாணவிகள், தன்னர்வலர்கள், பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications