மீனவர் படுகொலை குறித்து.. 10 மணி நேரத்திற்குப் பிறகு வாய் திறந்த எடப்பாடி!
தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டு 10 மனிநேரமாகியும் அதுகுறித்துக் கண்டனம் தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போதுதான் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்து 10 மணி நேரமாகியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து ஒன்றும் பேசாதது மிகக் கடும் அதிருப்தியை தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியது. தற்போதுதான் அவரிடமிருந்து கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய கடற்பகுதியில் இலங்கை கடற்படை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் கண்மூடித்தனமக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற 21 வயது இளைஞர் அநியாயமாக பலியானார். மேலும் சாரோன் என்பவருக்கு கையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடந்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து, முதல்வரிடம் இரவு 12 மணிக்குப் பேசியதாகக் கூறினார். ஆனால், இந்த கொடூர சம்பவம் நடந்து 10 மணிநேரத்துக்கு மேலாகியும் முதல்வர் இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தார். தன் மாநில மக்கள் கொலை செய்யப்படிருக்கிறார்கள் என்ற உணர்வில், உடனடியாக கண்டனத்தை தெரிவிக்காமல் இருந்தார் முதல்வர்.
இலங்கை அரசின் படுகொலையைக் கண்டித்து தமிழக மீனவர்கள் அனைவரும் கொந்தளித்து வரும் நிலையில் முதல்வர் அமைதியாக இருப்பதும் இது குறித்து எதுவும் கூறாமல் இருந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 11 மணி வாக்கில்தான் முதல்வரிடமிருந்து கண்டன அறிக்கை வெளியானது.
நேற்று ஆர்.கே நகர் பகுதியில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், இந்த அரசு மீனவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications