சென்னையில் விடிய விடிய பெய்த மழை... இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
சென்னையில் நள்ளிரவில் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
சென்னை: சென்னையில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்தது. மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவமழையால், கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்ததுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ.மழையும், பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.
நேற்று காலை முதல் சென்னையில் வெயில் தலைகாட்டியது. பல பகுதிகளில் சுட்டெரித்தது சூரியன். இதனால் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி மாலையில் மீண்டும் இருட்டிய வானம், இரவில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புறநகர்பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்றே வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் குடியேறினர். வரதராஜபுரத்தில் ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளத்திற்கு படகு மூலம் மக்களை மீட்டனர். இன்றும் பல பகுதிகளில் வெள்ளநீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக பல மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications