விவசாயிகள் செத்து சுண்ணாம்பாக..... எம்.எல்.ஏக்களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வா?
விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் மண்ணில் எம்.எல்.ஏக்களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு என அறிவித்து வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியிருக்கிறது தமிழக அரசு.
சென்னை: தமிழக மக்கள் வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு மழை எப்போ வரும்? குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.. இன்னொருபக்கம் வறட்சியின் கோரத்தாண்டவத்துக்கு 400 விவசாயிகள் மாண்டு போயிருக்கிறார்கள்.. இதைபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாத தமிழக அரசு எம்.எல்.ஏ.க்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வை அறிவித்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 140 ஆண்டுகாலத்துக்குப் பின் வறட்சி தலைவிரித்தாடுகிறது.. விவசாயத்துக்கும் குடிக்கவும் நீர் இல்லாமல் அல்லோகலப்படுகிறது.

400 பேர் பலி
தமிழக வரலாற்றிலேயே பெருந்துயரமாக வறட்சிக்கு 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளை பலி கொடுத்திருக்கிறோம். தமிழகம் பஞ்ச பிரதேசமாக போய்விட்டது.

மாணவர்கள் படிப்புக்கு வேட்டு
தமிழக மாணவர்களின் மேற்படிப்பு கனவை காவு கொள்ளும் அத்தனை திட்டங்களையும் டெல்லி திணிக்கிறது. இதைப்பற்றி ஒருதுளி கூட சிந்திக்காத சுயநலவாதிகளின் கூடாரமாக இருக்கிறது தமிழக அரசு.

குண்டர் சட்டம்
எதைப் பேசினாலும் குண்டர் சட்டம் பாயும் என்கிற அவலத்தை நிகழ்த்துகிறது அரசு. மாணவி என்றும் கூட பார்க்காமல் வளர்மதியை குண்டர் என முத்திரை குத்தி குண்டாஸை ஏவிவிட்டிருக்கிறது அரசு. வறட்சியே தமிழகத்தில் இல்லை என பச்சை பொய்யை உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது இந்த அரசு.

இருமடங்கு உயர்வு
செயல்படாத மக்களின் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசு இப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு இரண்டு மடங்கு சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் இனி ஆட்சிக்கே வரப்போவதில்லை என்பதாலும் முடிந்த அளவு கொள்ளையடித்துவிடவும்தானே இந்த எம்.எல்.ஏக்கள் சம்பள உயர்வு அறிவிப்பு.

விவசாயிகளுக்கு கொடுங்க
எம்.எல்.ஏக்களுக்கு அறிவித்த சம்பள உயர்வுத் தொகையை செத்துப் போன விவசாயிகளுக்கு கொடுக்க மனமில்லாத ஈவிரக்கமற்ற அரசுதான் இது. இப்படியான அரசு எங்களுக்கு எதுக்கு? என்பதுதான் தமிழக மக்களின் உச்சகட்ட குமுறல்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications