எங்கள் கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம்... விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு
ராமேஸ்வரம்: தங்களது கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண நடவடிக்கையால் ஊர் திரும்பியுள்ள தமிழக மீனவர்கள்.
கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 28 தமிழக மீனவர்களையும், படகு பழுதாகி கடலில் தத்தளித்த நான்கு தமிழக மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது இலங்கை கடற்படை.
பின்னர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப் படுவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர் விடுவிக்கப் பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர். அங்கு மீனவர் சங்கத்தினர் அவர்களை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் விடுதலையாகி வந்த மீனவர்களில் சிலர் கூறியதாவது :-

கைது...
நாங்கள் அனுராதபுரம் சிறையில் 2 நாட்கள் இருந்தோம். அதற்கு பிறகு விடுதலை செய்யப்படுவதாகக் கூறி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

விடுதலை...
அப்போது நீதிபதி, மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதாகவும் 6 படகுகள், மீன்பிடி சாதனங்களை விடுவிப்பது தொடர்பான விசாரணை ஜூலை 4-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

ஏமாற்றம்...
எங்களை விடுவித்தது மகிழ்ச்சி என்றாலும், எங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றும் படகுகளை விடுவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இலங்கை மீனவர்களே...
இலங்கை கடற்படையினர் எங்களை ஒப்படைக்க அழைத்து வந்தபோது, இலங்கை மீனவர்கள் தான், இந்திய மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும், அதனாலேயே இந்திய மீனவர்களை கைது செய்வதாகவும் எங்களிடம் கூறினர். இதன் மூலம் கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இலங்கை மீனவர்கள் தான் காரணம் என்பது தெளிவாகிறது.

எச்சரிக்கை....
சிறையில் இருந்தபோது இலங்கை மீனவ பிரதிநிதிகள் எங்களை சந்தித்தனர். அவர்கள் எங்களிடம் ‘இலங்கை கடல் பகுதிக்குள் தடைசெய்யப்பட்ட இழு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம்' என்றனர்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications