சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ அமைப்பே விசாரிக்கும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
Recommended Video

சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ அமைப்பே விசாரிக்கும் என்று தமிழக அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாணை பிறப்பித்திருந்தது.
2016ம் ஆண்டுதான் சிலைக் கடத்தல் விவகாரம் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. அன்று முதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பழனியில் கோயிலில் மாற்றப்பட்ட சிலை தொடங்கி தமிழகம் முழுக்க முறைகேடாக திருடப்பட்ட சிலை வழக்கில் விசாரணை நடக்கிறது.
ஆனால் தமிழகத்தில் இப்போதும் சிலை கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதில் தமிழக அரசின் நடவடிக்கையை சென்னை ஹைகோர்ட் கண்டித்து இருந்தது. மேலும் தமிழக அரசு சிலை கடத்தலை தடுக்கவில்லை என்றால் வழக்கை சிபிஐக்கு வழக்கை மாற்ற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் நேற்று சென்னை ஹைகோர்ட்டில், தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
மேலும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில் திருப்தியில்லை என்றும் அவர் தலைமையிலான குழு இதுவரை விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் தமிழக அரசே சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது. மேலும் நேர்மையான அதிகாரி பொன் மாணிக்கவேலிடம் இருந்து வழக்கை பறித்து சிபிஐ வசம் ஒப்படைப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
எனினும் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications