2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழப்பட்ட வீடுகளுக்கு ரூ.5000... தமிழக அரசு புதிய அறிவிப்பு
சென்னை: கனமழை காரணமாக இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளத்தால் சூழப்பட்டு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு குடிசைகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம், நிரந்தர வீடுகளில் வசிப்பவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், இந்த நிவாரண நிதியுடன் சேர்த்து ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசியும், ஒரு வேட்டி , சேலையும் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு, ரூ. 5 ஆயிரமும், பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4,100-ம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உயர்த்தி, முழுமையாகவும், பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கும் நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரமும், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்புக்காக சிறப்பு நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரமும் என மொத்தம் 10 ஆயிரம் வழங்கப்படும். பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4100 ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ரூ.900 வழங்கப்படும்.
இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளத்தால் சூழப்பட்ட நிரந்தர வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் நிவாரனத் தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக கணக்குத் தொடங்கப்பட்டு வரவு வைக்கப்படும். என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications