தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி-ஆக பதவி உயர்வு.. தமிழக அரசு ஒப்புதல்.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 1992 பேட்ச் அதிகாரிகளாக ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு டாப் லெவல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 32 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். விரைவி ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட உள்ளனர். பல பிரிவுகளின் டாப் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள் என்று பலர் மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கான உத்தரவு இந்த வார இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பணியாற்றும் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகியோர் டி.ஜி.பி. பதவி உயர்வு பெறும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
இவர்களுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதனால் இவர்கள் விரைவில் டி.ஜி.பி.க்களாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டிஜிபியாக பதவி உயர்வு பெற இருக்கும் இவர்கள் அனைவரும் 1992-ம் ஆண்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள்.

டி.ஜி.பி. பதவி உயர்வு பட்டியலில் உள்ள ராஜீவ்குமார் டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியில் உள்ளார். சந்தீப்ராய் ரத்தோர் ஆவடி காவல் ஆணையராக பணியாற்றுகிறார். அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக உள்ளார். வன்னிய பெருமாள் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பதவி வகிக்கிறார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications