ஹட்சன் நிறுவன பாலில் ரசாயனம் கலப்பு உள்ளது நிரூபணமாகியுள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தனியார் பால் நிறுவனங்களில் சோதனை நடத்த அமைச்சர் என்ற முறையில் முழு அதிகாரம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை : தனியார் பால் நிறுவனங்களில் சோதனை நடத்த முழு அதிகாரம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளார்.
ஹட்சன் நிறுவன பாலில் காலாவதி ரசாயனம் கலப்பு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. மேலும் பாலில் கலப்படம் இருப்பதை டோட்லா நிறுவனமே 2001-ல் ஒப்புக்கொண்டுள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விஜய் பால், ஹட்சன், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்கள் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவிப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து பால் நிறுவன மாதிரிகளை ஆய்வு செய்ய தடை விதித்து நேற்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஹட்சன் நிறுவன பாலில் காலாவதி ரசாயனம் கலப்பு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. மேலும் பாலில் கலப்படம் இருப்பதை டோட்லா நிறுவனமே 2001-ல் ஒப்புக்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
பாலில் ரசாயனம் இல்லை என்று தனியார் நிறுவனங்களால் நிரூபிக்க முடியாது, என்னை மிரட்டும் நோக்கத்துடனே ஹட்சன், டோட்லா, விஜய்பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
சட்டவிரோதமாக செயல்படும் பால் நிறுவனங்களே குற்றச்சாட்டுக்கு பயப்படுகின்றன, அமைச்சர் என்ற முறையில் பால் நிறுவனங்களில் சோதனை நடத்த முழு அதிகாரம் உள்ளது. அரசு ஊழியர் கடமை செய்வதை எதிர்த்து சிவில் வழக்கு தொடர முடியாது. பால் கலப்படம் தொடர்பாக தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் அவர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications