ஜெயலலிதாவின் ரூ.4000 கோடி சொத்து விபரங்களை தமிழக நாளிதழ்கள் மறைப்பது ஏன்?: கருணாநிதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த செய்திகளை தமிழக நாளேடுகள் வெளியிடாமல் மறைத்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திங்கட்கிழமையன்று (24-3-2014) பெங்களூரில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்ற போது, அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களே ஆஜராகி, ஏற்கனவே அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விவரங்களை நீதிபதியின் முன்னால் எடுத்துரைத்திருக்கிறார்.
அப்போது ஜெயலலிதா தரப்பினர் வாங்கிய சொத்துக்கள் பற்றியும், அதன் தற்போதைய மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமென்றும் பல ஆதாரப்பூர்வமான தகவல்களை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்தச் செய்தி, முரசொலி, தினகரன் ஏடுகளைத் தவிர வேறெந்த இதழிலும் வெளியிடப்படவில்லை.

நாளிதழில் வெளியாகவில்லை
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், ஒரு நாளிதழின் "வெப்சைட்டில்" நேற்றைய தினமே இந்தச் செய்தி விலாவாரியாக வெளியிடப்பட்டு விட்டது. அதற்குத் தலைப்பே, "ஜெ. குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான்; அரசு வக்கீல் தெரிவிப்பு" என்பதாகும். அதாவது, ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் என்று "வெப்சைட்டில்" வெளியிட்டுள்ள அந்த நாளேடு, இந்தச் செய்தியை நாளிதழிலே வெளியிடவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

பத்திரிக்கை தர்மமா?
நாளிதழில் அந்தச் செய்தியை வெளியிட்டால், முதலமைச்சர் அதனைப் படித்து விட்டு கோபமடைவார்! அதே நேரத்தில் உண்மையையும் வெளியிடாமல் இருக்கக்கூடாது என்பதற்காக "வெப்சைட்டில்" மட்டும் வெளியிட்டு விட்டு, நாளிதழில் வெளியிடாமல் தவிர்த்துவிட்டது. ஆனால் மற்ற நாளேடுகள் எல்லாம் முற்றிலுமாக இந்தச் செய்தியைத் தவிர்த்து விட்டன என்றால், தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட "பத்திரிகாதர்மம்" நிலவுகிறது என்பதைத்தான் வேதனையோடு குறிப்பிட வேண்டியதாக உள்ளது!

4000 கோடி ரூபாய் சொத்து
ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி முரசொலியில் வந்திருக்கிறது, தினகரனில் வந்திருக்கிறது. மற்றப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை ஜெயலலிதாவை ஆதரிக்கும் வகையில் இருட்டடிப்பு செய்திருக்கின்றன.

பத்திரிக்கைகள் நடுநிலையில்லை
ஏறத்தாழ நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றைய தினம் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின் பத்திரிகைகள் வெளியிடாததின் காரணம் என்ன? சூட்சுமம் என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம் தான் என்ன?.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications