கேரளாவில் இருந்து கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரி... திருப்பி அனுப்பிய தமிழக போலீசார்
கேரளாவிலிருந்து கருவாடு கழிவுகளை ஏற்றிவந்த லாரியை மடக்கிய தமிழக போலீசார் மீண்டும் கேரளா எல்லையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்துள்ளனர்
செங்கோட்டை: கேரளாவில் இருந்து கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கிப் பிடித்த தமிழக போலீசார் மீண்டும் கேரளாவிற்கே கொண்டு போய் விட்டு விட்டு வந்துள்ளனர். கழிவுகளை திரும்ப கொண்டு வந்தால் கைது செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுவருகிறது.

லாரி டிரைவர்கள்
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களின் கழிவுகளை கேரளாவிலிருந்து லாரி, லாரியாக தமிழகத்தின் எல்லைகள் வழியாக இங்குள்ள லாரி ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏற்றி வந்து தமிழகத்தில் கொட்டிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
கழிவுகள் கொட்டும் லாரிகள்
பல சோதனை சாவடிகளில் போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை திருப்பி அனுப்புவதும் நடந்து வருகின்றது. எனினும் கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.
கருவாடு கழிவு
இந்நிலையில் இன்று காலை கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு லாரியில் புழுக்கள் கொத்து..கொத்தாக சாலையில் கொட்டியவாறு கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரி குறித்து புளியரை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர்.
திருப்பி அனுப்பிய போலீஸ்
லாரியை விரட்டிய போலீசார் அந்த லாரியை புளியரை போக்குவரத்து சோதனை சாவடி அருகே மடக்கி பிடித்தனர். டிரைவரிடம் விசாரணை நடத்திய அவர்கள், மீண்டும் அந்த லாரியை ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடியை தாண்டி கழிவு லாரியை கொண்டு சென்று விட்டு விட்டு வந்தனர். கொல்லத்தை சார்ந்த ஓட்டுநர் சுந்தரம் மகன் சுதீப்பிடம் திரும்ப தமிழகத்திற்குள் வந்தால் கைது செய்து லாரியை பறிமுதல் செய்வதாக எச்சரித்து விட்டு போலீசார் திரும்பினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications