கேரளாவில் இருந்து கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரி... திருப்பி அனுப்பிய தமிழக போலீசார்
கேரளாவிலிருந்து கருவாடு கழிவுகளை ஏற்றிவந்த லாரியை மடக்கிய தமிழக போலீசார் மீண்டும் கேரளா எல்லையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்துள்ளனர்
செங்கோட்டை: கேரளாவில் இருந்து கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கிப் பிடித்த தமிழக போலீசார் மீண்டும் கேரளாவிற்கே கொண்டு போய் விட்டு விட்டு வந்துள்ளனர். கழிவுகளை திரும்ப கொண்டு வந்தால் கைது செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுவருகிறது.

லாரி டிரைவர்கள்
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களின் கழிவுகளை கேரளாவிலிருந்து லாரி, லாரியாக தமிழகத்தின் எல்லைகள் வழியாக இங்குள்ள லாரி ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏற்றி வந்து தமிழகத்தில் கொட்டிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
கழிவுகள் கொட்டும் லாரிகள்
பல சோதனை சாவடிகளில் போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை திருப்பி அனுப்புவதும் நடந்து வருகின்றது. எனினும் கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.
கருவாடு கழிவு
இந்நிலையில் இன்று காலை கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு லாரியில் புழுக்கள் கொத்து..கொத்தாக சாலையில் கொட்டியவாறு கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரி குறித்து புளியரை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர்.
திருப்பி அனுப்பிய போலீஸ்
லாரியை விரட்டிய போலீசார் அந்த லாரியை புளியரை போக்குவரத்து சோதனை சாவடி அருகே மடக்கி பிடித்தனர். டிரைவரிடம் விசாரணை நடத்திய அவர்கள், மீண்டும் அந்த லாரியை ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடியை தாண்டி கழிவு லாரியை கொண்டு சென்று விட்டு விட்டு வந்தனர். கொல்லத்தை சார்ந்த ஓட்டுநர் சுந்தரம் மகன் சுதீப்பிடம் திரும்ப தமிழகத்திற்குள் வந்தால் கைது செய்து லாரியை பறிமுதல் செய்வதாக எச்சரித்து விட்டு போலீசார் திரும்பினர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications