நீடிக்கும் போராட்டம்... அரசு அலட்சியம்: 3 பஸ் ஊழியர்களின் உயிரை காவு வாங்கியது!
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நீடிப்பதால் தொழிலாளர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அரசின் அலட்சியத்தால் நெல்லையில் பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், திண்டுக்கல்லில் கண்டக்டர் விஷ
சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போரட்டம் மூவரின் உயிரை காவு வாங்கியுள்ளது. டிரைவர், கண்டக்டர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். பஸ் டிரைவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள், கடந்த 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் கேட்டு தமிழக அரசு அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பியது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தையை சேர்ந்தவர் கணேசன், 50. தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த 7 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்தார். தற்போது நடந்து வரும் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.
நேற்று மதியம் பண்பொழி - செங்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள அவரது தோப்புக்கு கணேசன் சென்றுள்ளார். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அவ்வழியாக சென்ற தேன்பொத்தையை சேர்ந்த சிலர், கணேசன் மாமரத்தில் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோரிக்கையை அரசு ஏற்காமல் ஸ்டிரைக் நீடிக்கும் மனஉளைச்சலிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதேபோல திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் கண்டக்டர் செந்தில் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே, மைலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ், 46. அரசு பஸ் டிரைவர். கடந்த, 14 ஆண்டுகளாக பவானி பணிமனையில் பணிபுரிந்தார். தொ.மு.ச நிர்வாகியான இவர் தற்போது நடந்து வரும், வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பணி இடை நீக்கம் செய்யப்படுவதாக அரசு அனுப்பிய நோட்டீஸ் நேற்று தேவராஜுக்கு கிடைத்தது. இதனால், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். தகவலறிந்த பவானி அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications