சென்னை ஹோட்டல்களுக்கு கெட்டுப்போன மட்டன் சப்ளையா?
சென்னை: ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டு சென்னை ஹோட்டல்களில் விற்பனை செய்யப்பட திட்டமிட்டிருந்த அழுகிப்போன மாமிசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல ஆந்திராவில் இருந்தும் அழுகி போன மாமிசங்கள் சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றன.

சென்னைக்கு ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் ரயில்களில் அழுகிப்போன மாமிசங்கள் கொண்டுவரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடந்த பல மாதங்களாகவே அவ்வப்போது சென்னை மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி அதுபோன்ற மாமிசங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம்கூட, ஜெய்ப்பூர்-சென்னை எக்ஸ்பிரசில் கொண்டுவரப்பட்ட அழுகிப்போன 3,300 கிலோ அளவுள்ள மாமிசங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறிமுதலாகியுள்ளன. இந்த மாமிசங்கள், சென்னையிலுள்ள ஹோட்டல்களுக்கும், சிந்தாதிரிபேட்டை பகுதியிலுள்ள கறிக்கடைகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூரில் கிடைக்கும் மாமிசத்தைவிட இவை விலை குறைவாக இருப்பதால், இந்த மாமிசங்களை வாங்க பல கறிக்கடைகளும், ஹோட்டலகளும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் சுகாதாரம் கெட்டுவிடும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை மட்டன் வியாபார (சில்லரை) சங்க பொதுச்செயலாளர் எம்.அன்வர் பாஷா குவரோச்சி கூறுகையில், சென்னையில் தற்போது செயல்படும் கசாப்பு கடைகள் சுகாதாரமாக இல்லை. இதை சுகாதாரமான முறையில் மாற்றுவதுடன் கூடுதலாக கசாப்பு கடைகளை திறக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு ஹோட்டல் சங்க செயலாளர் சீனிவாசன் கூறுகையில், "ஹோட்டல்களில் அழுகிப்போன மாமிசங்களை பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினால், வாடிக்கையாளர் வருகையை அது பாதித்துவிடும். சாலையோர தள்ளுவண்டி கடைகளிலும், டாஸ்மாக் மதுபான கடைகளையொட்டிய ஹோட்டல்களிலும் வேண்டுமானால் அழுகிப்போன மாமிசங்கள் பயன்படுத்தப்படலாம்" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications