பி.எச் பாண்டியன் இத்தனை நாட்கள் மவுனம் காத்தது ஏன்? - டி.ராஜேந்தர்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது மவுனம் காத்த பிஎச் பாண்டியன் இப்போது வாய் திறப்பது ஏன் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்து விட்டு திடீரென ஜெயலலிதா மரணம் பற்றி வாய் திறப்பது ஏன் என்று லதிமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டு காயம்பட்ட நிலையில் சிகிக்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக பிஎச் பாண்டியன் கூறிய நிலையில் டி.ராஜேந்தர் இந்த கேள்வி கேட்டுள்ளார்.
அதுகுறித்து ஏன் சசிகலா தரப்பு விளக்கம் அளிக்கவில்லை என்று கேட்காத டி.ராஜேந்தர், ஏன் பிஎச் பாண்டியன் இப்போது கேட்கிறார் என்று கேட்டுள்ளார்.

சசிகலா தரப்பில் பேச்சு!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதிலடி தரும் வகையில் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

ஏன் இத்தனை நாள் மவுனம்
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 137 நாட்கள் மவுனம் காத்த பி.எச் பாண்டியன் திடீர் என்று ஜெயலலிதா மரணம் பற்றி சந்தேகம் எழுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார்.

அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், ஜெயலலிதா மரணமடைந்து 90 நாட்களும் கடந்து விட்ட நிலையில் இப்போது சந்தேகம் எழுப்பியது ஏன் என்று கேட்டுள்ளார் டி.ராஜேந்தர்.

இப்போது இவர் கேட்பது ஏன்
ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார் என்றும் சிசிடிவி கேமராக்கள் பற்றியும் சந்தேகம் எழுப்பிய பி.எச் பாண்டியன், குற்றவாளிகளை தாங்கள் நெருங்கிவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜேந்தர் கேள்வி எழுப்பாமல், ஏன் இப்ப கேட்கிறீர்கள் என்ற ரீதியில் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications