மார்ச் 15-இல் கட்சியின் பெயரை அறிவிக்கிறார் டிடிவி தினகரன்
Recommended Video

சென்னை: மார்ச் 15-ஆம் தேதி கட்சியின் பெயரையும் கட்சிக் கொடியையும் டிடிவி தினகரன் அறிமுகப்படுத்துகிறார்.
அதிமுகவை எடப்பாடி அணியிடம் இருந்து மீட்க டிடிவி தினகரன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

என்ன பெயர்கள்
இதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தனிக் கட்சியாக செயல்படுவதற்கு பெயரை வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினார். அப்போது அனைத்திந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்குமாறு டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
குக்கர் சின்னத்தை தங்கள் அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குக்கர் சின்னத்தை தினகரன் அணிக்கு ஒதுக்குமாறும் தினகரன் கேட்டுள்ள கட்சியின் பெயர்களில் ஒன்றை கொடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்ப்பு
இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை டிடிவி தினகரன் தனது கட்சிக்கு பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸ், எடப்பாடி தரப்பிலிருந்து ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது கிடைத்தாலும் நன்மை
இவர்களின் பெயர்கள் இல்லாமல் தினகரன் கொடுக்கப்பட்ட பெயர்கள் இல்லை. மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் மேற்கண்ட 3 பெயர்களில் எது கிடைத்தாலும் தினகரனுக்கு நன்மைதான். முதல் இரண்டு பெயர்களை சுருக்கினால் அதிமுக என்று வரும்.

அறிக்கை
எனவே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை பயன்படுத்தாமல் அவர் கட்சியின் பெயர் இல்லை என்றாகிவிட்டது. இதுகுறித்து டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கட்சியின் கொடி
மதுரை மேலூரில் 15-ஆம் தேதி நடக்கும் விழாவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. அன்று காலை 9 மணிக்கு கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பெயர் அறிவிக்கப்படும்.

அனைவரும் வாரீர்
அதிமுகவை கைப்பற்றும் வரை தனி ஒரு இயக்கமாக செயல்படுவோம். மேலூரில் நடைபெறும் கூட்டத்துக்கு தொண்டர்கள் வருமாறு தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.
-
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications