ஆட்சியை கவிழ்ப்பதில் தீவிரம்.. நாளை கூர்க் ரிசார்ட்டுக்கு விரைகிறார் தினகரன்!
கூர்க் விடுதியில் தங்கியுள்ள ஆதரவு எம்எல்ஏக்களை நாளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கூர்க்: ரிசார்ட்டில் தங்கியுள்ள ஆதரவு எம்எல்ஏக்களை நாளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது குறித்து சபாநாயகர் விளக்கம் கோரியும் எம்எல்ஏக்கள் நேற்று நேரில் விளக்கம் அளிக்கவில்லை.
விளக்கம் அளிக்க அவர்கள் அவகாசம் கோரிய நிலையில் அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்நிலையில் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூர்க் ரிசார்ட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தடை தங்களுக்கு சாதகம்தான்
அப்போது தன்னை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். 20ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது தங்களுக்கு சாதகம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து மூளைச்சலவை
மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினர் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் தங்களை மூளைச் சலவை செய்து தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

உள்நோக்கம் கொண்டது
குடியரசு தலைவரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை நீக்கும் முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.

நாளை கூர்க் செல்கிறார் டிடிவி
மேலும் கூர்க் ரிசார்ட்டில் தங்கியுள்ள ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நாளை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். சபாநாயகர் தனபால் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டதாக கூறியுள்ள நிலையில் தினகரன் கூர்க் செல்லவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியை கவிழ்க்க ஆலோசனை
அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பது குறித்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தலாம் என தெரிகிறது. இன்னும் ஒருவாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழ்க்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications