அமைச்சர்கள் கூறியிருந்தால் நானே ஒதுங்கியிருப்பேன்... டிடிவி.தினகரன் உருக்கம்
அமைச்சர்கள் என்னை கட்சியிலிருந்து ஒதுங்குமாறு கூறியிருந்தால் நானே கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர்கள் தன்னை கட்சிலிருந்து ஒதுங்குமாறு கூறியிருந்தால் நானே கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்தார்.
கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அறிவித்தனர். சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்து என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்றே ஒதுங்கிவிட்டேன்
இதனால் தமிழக அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இந்த அதிரடி திருப்பங்களுக்கு இடையே டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கட்சியில் இருந்து நேற்றே தான் ஒதுங்கி விட்டதாக அவர் கூறினார்.

விரோதமாக நடக்க மாட்டேன்
தொண்டர்களுக்கு விரோதமாக நான் நடக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார். மேலம் தனக்கு என தனியாக ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

நானே ஒதுங்கிருப்பேன்
அமைச்சர்கள் கூறியிருந்தால் நானே கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பேன் என்றும் டிடிவி தினகரன் கூறினார். மேலும் இதுதொடர்பான கூட்டத்திற்கு தன்னை அழைத்திருந்தால் தானும் சென்றிருப்பேன் என்றும் தினகரன் தெரிவித்தார்.

என்னிடம் யாரும் பேசவில்லை
அமைச்சர்கள் ஆலோசனைக்கு பிறகு என்னை சந்தித்து பேசுவதாக கூறினார்கள் ஆனால் தன்னிடம் யாரும் இதுவரை விரிவாக பேசவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

ஆர்கேநகர் தேர்தலில் போட்டியில்லை
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் கட்சியிலேயே நான் இல்லை. எப்படி தேர்தலில் மட்டும் போட்டியிட முடியும் என்றும் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications