கட்சியின் ஒற்றுமைக்காக தினகரன் தனது பதவியைத் துறக்க வேண்டும்.. அழுத்தம் கொடுக்கும் தம்பிதுரை!
கட்சியின் ஒற்றுமைக்காக தினகரன் தனது பதவியை துறக்கவேண்டும் என தம்பிதுரை வலியுறுத்ததியுள்ளார்.
சென்னை: கட்சியின் ஒற்றுமைக்காக தினகரன் தனது பதவியை துறக்க வேண்டும் என எம்பி தம்பித்துரை வலியுறுத்தியுள்ளார். கட்சி மற்றும் ஆட்சியில் தினகரன் குடும்பத்தின் தலையீடு தேவையில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தம்பிதுரை கூறினார்.
லோக்சபா துணை சபாநாயகரும் எம்பியுமான தம்பிதுரை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரனும், அவரது குடும்பத்தினரும் கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகளில் தலையிடுவதாக கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் எண்ணுவதாக தெரிவித்தார்.
அரசு நீடிக்க வேண்டும் என்று தினகரன் குடும்பத்தினர் விரும்பினால் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தம்பிதுரை கூறினார். மேலும் கட்சியிலோ, ஆட்சியிலோ தான் தலையிட மாட்டேன் என்றும், கட்சிப் பதவி அல்லது ஆட்சி அதிகாரத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று முன்னரே தினகரன் கூறியிருந்தார்.

சசி குடும்பம் தலையிடக்கூடாது
அதனை நிறைவேற்றி அவர் ஆட்சி மற்றும் கட்சி நடவடிக்கைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் தம்பிதுரை கூறினார். மேலும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் தம்பிதுரை கூறினார்.

சசி குடும்பம் உணரவேண்டும்
இதனால் கட்சி மற்றும் ஆட்சியில் தங்கள் தலையீடு அவசியம் இல்லை என்பதை தினகரன் குடும்பத்தினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தம்பிதுரை வலியுறுத்தினார். ஏற்கனவே உறுதியளித்தப்படி கட்சியின் ஒற்றுமைக்காக அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன் என்றும் தம்பிதுரை கூறினார்.

கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே..
ஜெயலலிதா மறைந்தப்பிறகு சசிகலாதான் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என அதிகம் அழுத்தம் கொடுத்தவர் தம்பிதுரை. ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்தபோதே அவரது பதவிக்கு வேட்டு வைத்து கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என வலியுறுத்தியவர் தான் இந்த தம்பிதுரை.

சசியால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்
தற்போது கட்சியும் சின்னமும் சசிகலா தரப்புக்கு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்த சசிகலா ஆதரவு கோஷ்டியும் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. சசிகலாவால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று கூறிய வாய்கள் எல்லாம் அவரது குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications