தூத்துக்குடி புனிதா பாலியல் வன்கொடுமை: ஓராண்டாகியும் கிடைக்காத நீதி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்று ஓராண்டு ஆகியும் இன்னும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2012, டிசம்பர் 20. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரை அடுத்துள்ள கிளாக்குளத்தில் அரையாண்டுத் தேர்வு எழுதுவதற்காக மாணவி புனிதா பள்ளிக்குச் சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் காலை, தாதன்குளம் ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார் புனிதா. இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்து புனிதாவை கொலை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம் பாறைகுட்டத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே 17 ஆம் தேதி புனிதா தொடர்பான வழக்கு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்படாததே வழக்கு தாமதம் ஆவதற்கு காரணம் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். புனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளாக உள்ளது.
டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேசமயம் தூத்துக்குடி மாவட்ட மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்து ஓராண்டு ஆகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications