ஆர்.கே.நகரில் மோதும் மண்ணின் மைந்தர்கள்.. மக்கள் ஆதரவு யாருக்கு?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் அணி சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் அணி சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உள்ளூர்காரர்களான திமுகவின் மருது கணேஷ் மற்றும் ஓபிஎஸ் அதிமுகவின் மதுசூதனனும் போட்டியிடுவதால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதனால் வருகிற 12ம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் அதிகாரச் சண்டை வலுப்பெற்றது. இதனைத்தொடர்ந்து சசிகலா அணி, ஓபிஎஸ் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணி என 3 அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.

மதுசூதனன் போட்டி
ஏற்கனவே சசிகலா தரப்பு அதிமுக, திமுக, தேமுதிக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் அந்த தொகுதியில் தொடங்கியது.
இந்நிலையில் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் அணி சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் அணியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு செய்து இன்று அறிவிக்கப்பட்டது.

வாக்கு சிதறல்
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக கைவசமாக இருந்துவந்தது. ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவினால் அதிமுக வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. திமுகவை பொறுத்தவரை புதுமுகமான மருதுகணேஷை களத்தில் இறக்கியுள்ளது. சொந்தவூர் என்பதால் மருதுகணேஷுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இருவரும் உள்ளூர் பிரமுகர்கள்
இதற்கிடையே ஓ.பி.எஸ் அணியின் ஆர்.கே.நகர் வேட்பாளர்களாக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுசூதனன் ஆர்.கே. நகர் தொகுதியை சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் 1991ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். மேலும் 1991 முதல் 1996ம் ஆண்டு வரை கைத்தறித்துறை அமைச்சராக மதுசூதனன் இருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மதுசூதனன் திகழ்ந்தவர்.

தீபா தரப்பு
இந்நிலையில் ஆர்.கே.நகரில், உள்ளூர்காரர்களான திமுகவின் மருது கணேஷ் மற்றும் ஓபிஎஸ் அதிமுகவின் மதுசூதனனும் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே நகரில் செல்வாக்கு மிகுந்த ஒரு நபரை ஓபிஎஸ் அணியினர் அறிவித்ததால் சசிகலா தரபினர் மற்றும் தீபா தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications