மணப்பாறையில் மாயமான மாணவிகள் உடல் ரயில் தண்டவாளத்தில் மீட்பு- அதிர்ச்சி வீடியோ
வையம்பட்டியச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: மணப்பாறை அருகே காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவிகள் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்களா? கொலை செய்யப்பட்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.
மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவிகள் ரதி தேவி மற்றும் செல்வி. நேற்று காலை பள்ளிக்குச் சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் தோழிகளின் வீடு, உறவினர்கள் வீடு என தேடியலைந்துள்ளனர். ஆனால் எங்கும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை இருவரும் தட்டாரம்பட்டி என்னும் ஊர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதை அறிந்த போலீசார் அங்கு வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த இரண்டு மாணவிகளும் அங்கு எப்படி வந்தனர், தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு இளம் மாணவிகள் அநியாயமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications