இரட்டை இலை எங்களுக்கே... அடித்துச்சொல்லும் அமைச்சர்- தீர்ப்பு அவுட் ஆயிருச்சோ
இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் நிச்சயம் கிடைக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக் உறுதியாக கிடைக்கும் என்று அமைச்சர் சி.சி சண்முகம் கூறியுள்ளார். தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக இறுதி வாதத்தை தாக்கல் செய்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக இன்று இறுதி வாதம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். ஒருங்கிணைந்த அணிகளும், தினகரன் அணியும் இன்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதனைக் கைப்பற்றுவது தொடர்பாக, ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி.தினகரன் அணி இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகிய இரு தரப்பினரும், தனித்தனியே பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, இரட்டை இலை வழக்கின் விசாரணை கடந்த மாதம் 6ம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் கடந்த 8ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பு வாதங்களைக் கூறி, தங்களுக்கே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வாதிட்டனர்.

பெரும்பான்மை உறுப்பினர்கள்
நவம்பர் 8ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், முகுல் ரோஹத்கி, சி.எஸ். வைத்தியநாதன் உள்ளிட்டோர், இரட்டை இலை யாருக்கு என்பதை பெரும்பான்மை உறுப்பினர்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றும், இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பதிலேயே சசிகலா தரப்பு குறியாக இருப்பதாகவும் வாதிட்டனர்.

தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பு
வாதத்தை கேட்டறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை நிறைவுற்றதாக தெரிவித்தனர். அனைத்து தரப்பினரும் வரும் 13ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

எழுத்துப்பூர்வ வாதம்
இதனிடையே இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக இன்று இறுதி வாதம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். ஒருங்கிணைந்த அணிகள் சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை தாக்கல் செய்தார். தினகரன் அணி சார்பிலும் இன்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யப்பட்டது.

இரட்டை இலை எங்களுக்கே
தேர்தல் ஆணையத்தில் இறுதி வாதத்தினை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம், வருமானவரித்துறை சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார். வருமானவரித்துறைக்கு கிடைத்த தகவலின்படி சோதனை நடைபெற்றது. மேலும் இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் நிச்சயம் கிடைக்கும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அமைச்சர் உறுதியாக சொல்வதைப் பார்த்ததால் தீர்ப்பு வெளியே கசிந்திருக்குமோ என்று சந்தேகப்படுகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications