ஜாமீனில் வெளியே வந்த உடனே இந்திய ஊடகங்கள் மீது பாய்ந்த 'தெனாவெட்டு' மல்லையா!
தம்மை நாடு கடத்துவது பற்றிய விசாரணை இன்று தொடங்கியுள்ளது அதைத் தான் இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்தி காட்டுகின்றன என்று விஜய் மல்லையா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : லண்டனில் தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து ஜாமினில் வெளிவந்த மல்லையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிகைப்படுத்திக் கூறுவதே இந்திய ஊடகங்களின் வேலை' என்று சாடியுள்ளார்.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக, விஜய் மல்லையா மற்றும் அவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே, விஜய் மல்லையா, வங்கிகளுக்கு கம்பியை நீட்டிவிட்டு லண்டனுக்கு பறந்து விட்டார். அதன்பிறகு மல்லையா சொந்த நாட்டிற்கே திரும்ப முடியவில்லை என்பதோடு அங்கிருந்தபடியே அவ்வபோது அவரைப் பற்றி செய்தி வரும் போதெல்லாம் டுவிட்டரில் நையாண்டி கருத்துகளைப் போடுவதையே பிழைப்பாக வைத்துள்ளார்.
அவரை நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப லண்டனில் இருந்த விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இன்று கைது செய்தனர். ஆனால் கைதாகி 3 மணி நேரத்திலேயே விஜய் மல்லையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Usual Indian media hype. Extradition hearing in Court started today as expected.
— Vijay Mallya (@TheVijayMallya) April 18, 2017
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக ஜாமீனில் வெளிவந்த கையோடு ஒரு தெனாவெட்டு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பீர் மன்னன். 'இந்திய ஊடகங்கள் கைது நடவடிக்கையை மிகைப்படுத்திக் கூறுகின்றன' அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நாடு கடத்துவது தொடர்பான விசாரணை மட்டுமே தொடங்கியுள்ளது என்று ஹாயாக டுவீட்டியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications