7 பேர் விடுதலை: ராகுலுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியாது - வைகோ
மதுரை: ஏழு தமிழர்களை விடுதலை செய்வது பற்றிய தமிழ அரசின் முடிவுக்கு என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே ராகுல் காந்தி உள்ளார்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா புதன்கிழமையன்று சட்டசபையில் அறிவித்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ''நாம் நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? பிரதமரை கொன்றவர்களையே விடுவிக்கும்போது, சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும்போது எப்படி நீதி கிடைக்கும்?'' என அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்து குறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ''எப்போதும் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே ராகுல் காந்தி உள்ளார். அவர் கண்டனம் தெரிவித்ததற்கான காரணம் அனைவரும் அறிந்ததே'' என்று கூறியுள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications