தீக்குளித்த தொண்டரை இயற்கை அன்னை காப்பாற்ற வேண்டும் : கண்ணீர்மல்க வைகோ வேதனை!
மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தொடங்கும் நடைபயண பேரணியில் மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞரின் தீக்குளிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த வைகோ மேடைய
Recommended Video

மதுரை : நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இருந்து கம்பம் வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மதுரை பொதுக்கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளித்தார். இந்த தீக்குளிப்பு சம்பவத்தை பார்த்து மேடையில் இருந்த வைகோ கண்ணீர் மல்க பேசிவிட்டு தன்னுடைய நடைபயணத்தை தொடர்வதாக தெரிவித்தார்.
மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதையடுத்து மேடையில் கண்ணீர் மல்க வைகோ பேசியதாவது : என்னுடைய தம்பியை காப்பாற்றம்மா. இந்த தம்பிக்கு 30, 35 வயது கூட இருக்காது, அவனுடைய குடும்பத்தார் அவனை நம்பித் தானே இருக்கிறார்கள். என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பிரச்சாரத்தை தொடங்குவதற்காக மேடையில் மதிமுக நிர்வாகி நிறைவு உரையாற்றுவார் என்று சொல்லி முடிக்கிறோம் நெருப்பு தனலாக பல உயரத்திற்கு வந்துவிட்டானே.

கட்சித்தொண்டர்களுக்கு நான் எவ்வளவோ சொல்லி இருக்கிறேன். எந்தநிலையிலும் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறேனே என்று வைகோ மேடையில் கண்ணீர் விட்டார். இப்படித் தான் 1993ல் 5பேர் தீக்குளித்தார்கள். அதனால் தான் இந்த கட்சியை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நெஞ்சம் வெடிக்கும் வேதனையோடு இப்போது நான் என் கடமையாற்ற செல்ல வேண்டி இருக்கிறது. இயற்கை எப்படியாவது அந்த வீரத்தம்பியை மீட்டு கொடுக்க வேண்டும் என்று இயற்கை அன்னையின் பாதங்களை மன்றாடி இறைஞ்சி கேட்டுக் கொள்கிறேன். பயணத்தை நான் தொடர்கிறேன் என்று சொல்லி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான தன்னுடைய நடைபயணத்தை வைகோ தொடர்ந்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications