மலேசியாவில் வைகோவுக்கு அவமரியாதை… சீமான் கண்டனம்
மலேசியாவிற்கு சென்ற வைகோவை அவமரியாதை செய்த அந்நாட்டு அரசிற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: கோவில்பட்டி காந்தி மைதானம் அருகேயுள்ள ரதவீதியில் நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொணடு பேசியதாவது: நாம் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்ற பயம் எழுந்துள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை. ஓடும் நீரை கூட ஆழ்துளை கிணறு போட்டு தான் குடிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கல்குவாரியில் இருந்து குடிநீர் வழங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுகிறது. குடிக்க தண்ணீர் இல்லை. உணவிற்கு வழி இல்லை. காருக்கு வழி இருக்கு. செல்போனுக்கு வழி இருக்கு. எல்லாத்திற்கும் திட்டம் இருக்கு. ஆனால் 130 கோடி மக்களுக்கு குடிக்கும் தண்ணீருக்கும், உணவிற்கும் திட்டம் இல்லை.
அதனால் தான் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என வந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் அழிவு தான் இதற்கு காரணம். மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் வாக்காளர்களாக மட்டுமே உள்ளீர்கள்.
திட்டமிட்டு இந்தியை திணித்து வருகின்றனர். இந்தியை படியுங்கள். ஆனால் வேலைக்கு வெளிமாநிலங்களுக்கு செல்லுங்கள். தமிழகத்தில் தமிழ்படித்தால் மட்டுமே வேலை. ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் தேவையில்லை.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேசியா சென்ற வைகோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது தனி மனிதனுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. நமது நாடு மற்றும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது அ.தி.மு.க அரசு அல்ல. பா.ஜ.க அரசு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களான உணவுப் பாதுகாப்பு, மீத்தேன், ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு சீமான் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications