ராஜபக்சேவுக்கு பாரதரத்னா தரக் கோரிய சாமியை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?: வைகோ
மதுரை: தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணியம் சாமியை யாருமே கண்டிக்கவில்லை. பாஜகவில் யாருமே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே. அவரது பேச்சை தமிழிசை செளந்தரராஜன் ஏற்கிறாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கேட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இதுதொடர்பாக மேலும் கூறுகையில்,

அந்த மனிதர் பெயரை (சு. சாமி) உச்சரிக்கக் கூட விரும்பாதவன் நான். ராஜபக்சேவால் திணிக்கப்பட்ட ஏஜண்ட்தான் சாமி. அவர், ராஜபக்சேவின் ஏஜண்டாக ராணுவ ஆலோசனை மாநாட்டுக்கு அனுப்பபட்டதும் கொலைகார ராஜபக்சேவுக்கு பாரதரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்றதும், படகுகளை பிடிக்கும் படி நான் தான் சொன்னேன் என்பதும், மீனவர்களை நான் தான் விடுவிக்க சொன்னேன் என்பதும் உங்கள் மவுத் பீசாக ஊதுகுழலாக பேசுகிறார் சுப்ரமணிய சாமி.
நான் கேட்கிறேன் பிரதமர் நீங்களா சுப்ரமணிய சாமியா. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கூறிய சாமியை ஏன் ஒருவரும் கண்டிக்கவில்லை.
சுப்ரமணிய சாமி டுவிட்டரில் என்.டி.ஏ வை விட்டு மதிமுக வெளியேறவேண்டும் அல்லது தூக்கி எறியப்படுவீர்கள் கெட் அவுட் என்கிறார். நான் கேட்கிறேன் பாஜக தலைவர் இவரா அமீத் ஷாவா. டுவிட்டரில் என்னை மிரட்டியவர் வீட்டை மதிமுக தொண்டர்கள் முற்றுகையிட உள்ளதாகவும் அப்படி நடந்தால் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி சகோதரி ஜெயலலிதா ஜாமீனை ரத்து செய்துவிடுவதாக கூறுகிறார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications