பிரிட்ஜோ சுட்டுக் கொலை.. மத்திய அரசுக்கு மான ரோசம் இல்லையா.. வைகோ ஆவேசம்
மத்திய அரசுக்கு மான ரோசம் இல்லையா என்று வைகோ ஆவேசமாக கேள்விகேட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பின்னர் வைகோ இவ்வாறு கூறினார்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து வைகோ இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரட்ஜோ மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படை நடுகடலில் அவரை சுட்டுக் கொன்றது. மேலும், அவருடன் சென்ற சரோன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

தங்கச்சி மடத்தில் வைகோ
இதனையடுத்து, ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் வைகோ இன்று திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, இலங்கை அரசைக் கண்டித்து கடுமையாக பேசிய வைகோ, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்.

பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆறுதல்
இதனையடுத்து, சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் வீட்டிற்கு வைகோ சென்றார். அங்கு அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

இந்தியாவின் பிரஜைகள்தானே..
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழக மீனவர்கள் இந்தியாவின் குடிமக்கள்தானே என்று கேள்வி கேட்டார். இந்த அட்டூழியத்தை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

மான ரோசம்..
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை அராஜகம் செய்து வருகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் மத்திய அரசுக்கு மான ரோசம் இல்லையா என்று வைகோ ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி மிகவும் நல்லவர், நல்ல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று அன்றாடம் நற்சான்றிதழ் கொடுக்கும் வைகோவே இதனை மோடியிடம் நேரில் கேட்கலாம் என்று அங்கிருந்த மக்கள் முணுமுணுத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications