வர்தா.. சென்னை விமான நிலையம் இரவு 8 மணிவரை மூடல்.. தண்ணீர் வெளியேற்றும் பணி துரிதம்
சென்னை விமான நிலைய ஓடுதளம் மாலை 6 மணிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன.
சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் விமானங்களால் தரையிறங்க முடியவில்லை. எனவே காலை 11 மணி நிலவரப்படி, 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன. 9 விமானங்கள் தாமதமாகின. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 7 சர்வதேச விமானங்களும் கூட தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை இழுத்து மூடப்பட்டது. தண்ணீர் தேங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் மழையும், காற்றும் விடாத காரணத்தால், மதியம் 3 மணிவரை ஓடுதளம் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அப்போதும் நிலைமை மோசமாக இருந்ததால் மாலை 6 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வெள்ளம் வடியவில்லை என்பதால் இரவு 8 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல சென்னையில் புற நகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும் புயல் ஆந்திராவின் தெற்கு பகுதி வழியாக செல்லும் என்பதால், திருப்பதி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாம். இவ்விரு விமான நிலையங்களுக்கு வர வேண்டிய விமானங்கள், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications