சென்னையை நாசமாக்கும் வர்தா புயல்... உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: வர்தா புயல் சென்னையை நாசமாக்கி வரும் நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது. நாடா புயலை போன்று இல்லாமல் வர்தா சென்னையை மிரட்டி வருகிறது.
சென்னையில் கனமழை பெய்து வருவதுடன், பேய்க்காற்று வீசி வருகிறது. வீடுகளின் மேல் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் பறந்து விழுந்துள்ளன. பல்வேறு இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும்.
அப்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் சென்னையை நாசமாக்கி வருகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர் 044 - 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.