கூட்டணியில் இருந்து வெளியேறி பலத்தை நிரூபிக்க வேண்டும்: வி.சி.கவினர் வலியுறுத்தல்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட்டு வலிமையை நிரூபிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் கருத்து கூறியுள்ளார். அதேபோல தி.மு.க. நம்பிக்கை துரோகம் செய்கிறது. எனவே கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும் என புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பாளர் பாவாணன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 5 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், கிடைத்தது 1 தொகுதி மட்டுமே. இது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்தத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிட்டு தனது வாக்கு வங்கி என்ன என்பதைகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு முறையாவது தனித்துப் போட்டியிடாமல் தேர்தல் அரசியலில் எந்தக் கட்சியும் தனது பேர வலிமையை அதிகரித்துக் கொள்ள முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பாளர் பாவாணன் கூறியதாவது:
தி.மு.க. தலைமையுடன் தலைவர் திருமாவளவன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் 1 தொகுதியை மட்டும் அக்கட்சி எங்களுக்கு ஒதுக்கியுள்ளது. 5 தொகுதிகளை எதிர்பார்த்திருந்த தொண்டர்களுக்கு இது ஏமாற்றத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபடி 2 தொகுதியை கூட ஒதுக்காமல் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தி.மு.க. துரோகம் செய்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் தலைவர் திருமாவளவன் அதிகமான பற்று உடையவர். தி.மு.க. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரசுடன் சேர்ந்து அவப்பெயர் பெற்றிருந்தது. அதனை துடைத்தெறிந்ததே எங்கள் தலைவர் திருமாவளவன் தான்.
துரோகம் செய்யும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவோம் என தலைவர் திருமாவளவனிடம் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications