For Daily Alerts
Just In
கூவம் நதிநீர் ரெடி...பாஜக, காங். அலுவலகத்தை முற்றுகையிட வருகிறோம்..வீரலட்சுமியின் வார்னிங் 'வீடியோ'
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்க்கும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை அலுவலகங்களை கூவம் நதிநீருடன் முற்றுகையிடப் போவதாக தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி வீடியோ மூலமாக எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வீரலட்சுமி கெடு விதித்திருந்தார். அக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வீரலட்சுமி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் கூவம் நதிநீர் என எழுதப்பட்ட பானையை கையில் ஏந்தியபடி தமிழக பாஜக, காங்கிரஸ் அலுவலகங்களை முற்றுகையிட வருகிறோம் என எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார் வீரலட்சுமி.
Comments
English summary
TMP leader Veeralakshmi has warned that her party will lay a siege to Congress and BJP Head offices at Chennai.
Story first published: Tuesday, October 18, 2016, 13:51 [IST]