விஸ்வகர்மா யோஜனா அல்ல! மனுதர்ம யோஜனா திட்டம்.. திராவிடர் கழகம் வீரமணி காட்டம்
தருமபுரி: விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் ஏமாந்தால் நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் குலத் தொழில் கல்வி திணிப்பு என்பது பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவி கொடுக்க வேண்டுமே தவிர குரு சிஷ்ய முறையில் அப்பாவிடம் இருந்து பிள்ளை செய்ய வேண்டும் என்ற தொழிலுக்கு வழங்கக் கூடாது.
குறிப்பாக அரசின் இந்த திட்டத்திலேயே செருப்பு தைப்பவர்கள் போல் படங்கள் எல்லாம் போட்டிருக்கிறார்கள். இவர்களுடைய பிள்ளைகள் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரிகளாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் செல்லக் கூடாது என்பதற்காக 18 வயது ஆன பிறகு இந்த தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ஒரு லட்சம் நிதியுதவி தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதில் ஏமாந்தால் நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள். இது மக்களுக்கு புரியவில்லை, ஒரு லட்சம் கொடுக்கிறார்களே ஏன் இதை தடுக்கிறார்கள் என நினைக்கிறார்கள் இது விஸ்வகர்மா யோஜனா திட்டம் இல்லை. மனு தர்ம யோஜனா திட்டம்.

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டபூர்வமாக கையெழுத்து வாங்கி வருகிறார்கள். ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களில் தற்கொலைகள் நடக்கின்றன. வன்முறையில் இறங்கவில்லை, ரயிலை கொளுத்தவில்லை, சட்டபூர்வமாக பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கொடுத்தோம். அவர்கள் செய்யவில்லை என்பதை தெளிவாக மக்கள் உணர்வார்கள். இதற்கு பதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரே பதில் வரும். நீட், அதானி, அது இது எல்லாமே முடிவுக்கு வரும். இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications