தமிழகத்தில் அரசு என்பது மக்களுக்காக நடப்பதாகத் தெரியவில்லை... தி.வேல்முருகன் கண்டனம்
தமிழகத்தில் அரசு என்பது மக்களுக்காக நடப்பது போன்று தெரியவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அரசு என்பது மக்களுக்காக நடப்பது போன்று தெரியவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
பொறையாறில் அரசு போக்குவரத்து பணிமனை ஓய்வறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு தமிழக அரசே காரணம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இடிந்து விழுந்த மேற்கூரை
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாறில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக் கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் ஓட்டுநர்கள், ஒருவர் நடத்துனர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் யாரும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி தொடர்கிறது. இரவுப் பணி முடிந்து ஓய்வறையில் ஊழியர்கள் 20 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. அது பழமையான கட்டடம் என்று தெரிகிறது.இதே போன்றதொரு நிகழ்வு கடந்த மாதம் கோவையில் ஏற்பட்டது.

அரசு என்ற ஒன்று உள்ளதா
கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்துவிழுந்து 5 பேர் பொதுமக்கள் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர். இத்தனைக்கும் இந்த பஸ் நிலையம் 1997ல்தான் கட்டப்பட்டது. கோவை பஸ் நிலைய விபத்தை அடுத்து தமிழகமெங்கும் போக்குவரத்துக் கட்டடங்கள் தொடர்பாக பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்காததன் விளைவுதான் இந்தப் பொறையாறு பணிமனைப் பலிகள்.மேலும் கடந்த ஓராண்டாகவே தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.

சோமனூர்,பொறையாறு உயிரிழப்புகள்
அப்படி அரசு என்ற ஒன்று இருப்பதாக அதில் அங்கம் வகிப்போர் சொல்வார்கள் என்றாலும், அது மக்களுக்காக நடப்பதாகத் தெரியவில்லை; மாறாக, அதைத் தங்களுக்காக மட்டுமே அவர்கள் பயன்படுத்திக் கொள்வதாகப் படுகிறது.அதன் காரணமாகவே கோவை சோமனூரிலும் நாகைப் பொறையாறிலும் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
இந்தக் கொடூரத்திற்கு அரசைக் குற்றம்சாட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இதுபோல் இனி நிகழாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்துகிறது.
-
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications