இலவசங்களை இனிப்பு மிட்டாய் போலத் தருகிறார்கள்.. வெங்கையா பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஊழலால் தமிழகம் பின்னோக்கி போய் விட்டது. இங்கு ஆட்சிக்கு வருபவர்கள் இலவசங்களை இனிப்பு மிட்டாய் போலத் தருகிறார்கள் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு காட்டமாக தெரிவித்தார்.

பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நெல்லையில் நடந்தது. நெல்லை தொகுதி வேட்பாளர் மகாராஜன், ராதாபுரம் தொகுதி வேட்பாளர் கனி அமுதா ஆகியோரை அறிமுகப்படுத்தி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:

Venkaih Naidu slams Dravidian parties for their freebies

பட்டிமன்றம் போல் ஆரோக்கிய விவதாம் நடப்பதற்கு பதிலாக எதிர்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் ஊழலால் தமிழகம் பின் தங்கிவிட்டது. பலமுறை ஆட்சி மாற்றம் நடந்த பின்னரும் தமிழகத்தில் மின்வெட்டு, ஏழ்மை ஓழியவில்லை. தரமான கிராம சாலைகள் இல்லை.

தேவையான டாக்டர்களோ மருந்துகளோ இல்லை. ஏழைகளுக்கு நல்ல வசிப்பிடம் இல்லை. தேர்தல் வந்தால் தமிழகத்தில் இலவசங்களை இனிப்பு மிட்டாய் போல் வழங்கி ஏமாற்றுகின்றனர். இலவச திட்டங்கள் நிரந்தரமானவை அல்ல.

மோடி அறிவித்த கங்கை-காவேரி உள்ளிட்ட இணைப்பு திட்டங்களே நிரந்தரமானவை. இது போல் ராதாபுரத்துக்கு தாமிரபணியில் இருந்து வெள்ள நீர் வடிகால் திட்டமும், மானூர் பளளமடை குளத்திற்கு தாமிரபரணி நீரை கொண்டு செல்லும் திட்டமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக செயல்படுத்தப்படும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு கோடி ஏழைகள் இலவச கேஸ் சிலிண்டர் பெறுவர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவதும் மின்வெட்டு இருக்காது என்றார் வெங்கையா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+