மக்கள் நல கூட்டணிக்கு குட்பை.. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக!
சென்னை: உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் நல கூட்டணியை விட்டு வெளியேற தேமுதிக தயாராகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான அடிமட்ட நிர்வாகிகள் அக்கூட்டணியை தொடர விரும்பாததால் விஜயகாந்த் இம்முடிவை எடுக்கக்கூடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக படுதோல்வியடைந்தது. விஜயகாந்த் உட்பட 103 பேர் டெபாசிட்டை இழந்தனர்.
வாக்கு சதவீதம் மிக மோசமாக சரிந்தது. அதிக சீட்டுகளை வெல்ல வாய்பில்லை என்று விஜயகாந்த்தால் கணிக்கப்பட்ட திமுக, பெரிய கூட்டணி இல்லாமலேயே 89 தொகுதிகளை வென்றுவிட்டது.

ஆலோசனை
இந்த தோல்வியால் விஜயகாந்த் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தோல்விக்கான காரணம் குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடிமட்டம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் ஒன்றியம், நகரம், மற்றும் மாநகர பகுதி செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கூட்டணி மீது குற்றச்சாட்டு
ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலானவர்கள் மக்கள் நல கூட்டணியிலிருந்து வெளிவர வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் வெற்றிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உழைக்கவேயில்லை என்றும் தேமுதிகவினர் புகார் கூறியுள்ளனர். இதனால்தான் டெபாசிட் போகும் அளவுக்கு மோசமான தோல்வியை விஜயகாந்த் சந்தித்ததாக தேமுதிகவினர் புகார் கூறியுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள்
பல மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லையென்றும், தேர்தலில் சிறப்பாக செயல்படவில்லையென்றும் விஜயகாந்திடம் புகார் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ம.ந.கட்டணி
இதனையடுத்து 20 ஆம் தேதிக்குப் பின்னர் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளை மாற்றி விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியே வரும் முடிவை எடுப்பார் எனவும் தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications