நெடுவாசலை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை திமுகவிற்கு இல்லை - ஸ்டாலின்
நெடுவாசல் போராட்டத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை திமுகவிற்கு இல்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் நடைபெறும் பெறும் போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், ஜல்லிக்கட்டு பிரச்சினை, நெடுவாசலை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்று கூறினார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சித்தலைவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கொட்டும் மழையில் போராட்டம் நைடைபெற்று வருகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நெடுவாசலுக்கு நேரில் வந்து போராட்டத்தில் பங்கேற்று பேசினார். தரையில் மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார்.

மத்திய அரசு உறுதி
போராட்டக்களத்தில் பேசிய ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த கோரி திமுக எம்.பிக்கள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் முறையிட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி மொழி அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மாநில அரசு நடவடிக்கை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று கூறிய ஸ்டாலின், தமிழக அரசு சிறப்பு சட்டசபைக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார். மாநில அரசின் நடவடிக்கைக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றார்.

திமுக துணை நிற்கும்
நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு திமுக என்றைக்கும் துணை நிற்கும் என்று கூறிய ஸ்டாலின், போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தானும் பங்கேற்பேன் என்றார். அமைச்சர்களுக்கு சிறையில் உள்ள சசிகலா உடன் ஆலோசனை நடத்தவே நேரம் சரியாக இருக்கிறது என்று கூறினார்.

அரசியலாக்க மாட்டோம்
திமுக எதையும் அரசியலாக்காது என்று கூறிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களை வைத்து திமுக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications