காவிரியில் இழந்த 14.75 டிஎம்சி நீரை பெற வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை

காவிரியில் இழந்த 14.75 டிஎம்சி நீரை பெற நடவடிக்கை தேவை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியில் இழந்த 14.75 டிஎம்சி நீரை பெற நடவடிக்கை தேவை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

We should take action to bring back 14.75 tmc water in Cauvery says Stalin

தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும். கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு.

இதுகுறித்து தற்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''காவிரியில் இழந்த 14.75 டிஎம்சி நீரை பெற நடவடிக்கை தேவை. காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட பாடுபட்டது திமுக '' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் '' அதிமுக அரசின் திறனற்ற வாதங்களால் காவிரி உரிமை பறிபோனது.காவிரியில் தமிழகத்தின் உரிமையை எடப்பாடி அரசு பறிகொடுத்துவிட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+