1 கி.மீ பயணிக்கும் குண்டு.. மீறப்பட்ட விதிமுறை.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பரபர தகவல்
Recommended Video

சென்னை: நாட்டு எல்லைகளில் தீவிரவாதிகளை சுட்டு கொல்ல பயன்படுத்தப்படும் அதிநவீன துப்பாக்கியை வைத்து தூத்துக்குடியில் மக்களை போலீசார் சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலீசார் விதிமுறைகளை மீறி, மக்களை சுட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவல்துறை விதிமுறைகள் அடிப்படையில், ஒரு போராட்டத்தை ஒடுக்க கூறும் வழிமுறைகள் இவைதான்.
1) போராட்டக்காரர்கள் கலைந்து போக எச்சரிக்கை செய்ய வேண்டும்.
2) எச்சரித்த பிறகும் கலைந்து் போகவில்லை என்றால், கண்ணீர் புகை குண்டு வீசலாம்
3) கண்ணீர் புகைக்கும் கூட்டம் கலையாவிட்டால், போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கலாம்
4) அப்படியும் கூட்டம் கலைய மறுத்தால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடலாம்
5) ஆபத்து ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானால் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுடலாம்.
ஆனால், தூத்துக்குடியில் நெஞ்சு மற்றும், தலையை குறி பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளதாக காவல்துறை மீது புகார் எழுந்துள்ளது. மேற்கூறிய வழிமுறைகளை காவல்துறை பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீசார் பயன்படுத்திய துப்பாக்கி குறித்தும் புதிய தகவல்கள் வெளியே வந்துள்ளன. Insas - SLR வகை துப்பாக்கியை வைத்து போலீசார் குறி பார்த்து சுட்டதாகவும், இந்த வகை துப்பாக்கிகள், ஒரே நேரத்தில் 30 குண்டுகளை வெளியிட கூடியவை என்றும் தகவல்கள் கூறுகின்றன. எல்லைகளில் தூரத்தில் நடமாடும் தீவிரவாதிகள் சுட இதுபோன்ற துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அதிகபட்சம் 800 மீட்டர் தூரம் வரை குண்டு பாயக்கூடியதாம். அதாவது கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டு பயணித்து இலக்கை தாக்க கூடியது. இதை வைத்தே, அந்த வகை துப்பாக்கியின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த வகை துப்பாக்கிகளை கலவர இடங்களில் பயன்படுத்த அனுமதியில்லை. ஆனால், தூத்துக்குடியிலோ, கலெக்டர், வட்டாட்சியர் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications