கேஸை முடித்து வையுங்க...இல்லை ஜெயிலுக்கு அனுப்புங்க... கோர்ட்டில் கொந்தளித்த வைகோ!
தம் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும்; இல்லையெனில் சிறைக்கு அனுப்புங்கள் என எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ கொந்தளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சென்னை: தம் மீதான தேசதுரோக வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்; இல்லையெனில் தம்மை சிறையிலடைக்க வேண்டும் என கொந்தளித்ததால் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வைகோவை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

திடீர் மனு
இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று திடீரென ஆஜரான வைகோ ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஜெயில்ல போடுங்க
அந்த மனுவில், தம் மீது நிலுவையில் உள்ள தேச துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன் வழக்கை விரைந்து முடிக்காவிட்டால் தம்மை சிறைக்கே அனுப்பிவிடுமாறும் வைகோ கேட்டுக் கொண்டார்.

நீதிமன்ற காவல்
எழும்பூர் நீதிமன்றத்தை வைகோவின் இந்த கோரிக்கை அதிர வைத்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத், வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஜாமீன் வேண்டாம்....
மேலும் வைகோ தமது சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். ஆனால் வைகோ ஜாமீனில் செல்ல மறுத்தவிட்டார்.

புழல் சிறையில்...
இதையடுத்து வைகோவை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையிலடைத்துள்ளனர். தமிழகமே ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலை பெரும் எதிபார்ப்புடன் பார்த்து கொண்டிருக்க வைகோவின் இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications