ஜெயலலிதா மரணம்.. விசாரணைக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடாதது ஏமாற்றம்- பொன் ராதாகிருஷ்ணன்
ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணைக்கு உத்தரவிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் ஆதங்கப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்வராக முறையாக திங்கள்கிழமை பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, மேலும் 500 மதுக்கடைகளை மூடுவது என்று அறிக்கையில் தெரிவித்தது வரவேற்கதக்கது.
எனினும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அதை தற்போதைய புதிய முதல்வர் தனது முதல் அறிக்கையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அதுபோன்ற அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றம் மட்டுமே விஞ்சியது.
தமிழக சட்டசபையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல. இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் நடந்து கொண்டனர். இது சட்ட சபை வரலாற்றில் மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருவதால் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று அவர் கூறினார்.
-
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications