ஸ்டெர்லைட்: 47 நாட்களுக்குப் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்.. ரஜினி கேள்வி
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 47 நாட்களாக மக்கள் போராடி வரும் நிலையில் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புதிராக இருக்கிறது என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்ட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் கேடு விளைவிப்பதாகவும், அதனை உடனே மூடக்கோரியும் பொதுமக்கள் 47 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

இந்தப்போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை தமிழக அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது #SterliteProtest
— Rajinikanth (@rajinikanth) March 31, 2018
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பிரச்னை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications