ஸ்டெர்லைட்: 47 நாட்களுக்குப் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்.. ரஜினி கேள்வி
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 47 நாட்களாக மக்கள் போராடி வரும் நிலையில் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புதிராக இருக்கிறது என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்ட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் கேடு விளைவிப்பதாகவும், அதனை உடனே மூடக்கோரியும் பொதுமக்கள் 47 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

இந்தப்போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை தமிழக அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது #SterliteProtest
— Rajinikanth (@rajinikanth) March 31, 2018
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பிரச்னை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications