தேர்தலில் போட்டி: தமிழக ஆம் ஆத்மி முக்கிய நிர்வாகியின் நிலைப்பாடு என்ன?

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 25 தொகுதியில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நிர்வாகியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான கிறிஸ்டினா சாமி தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கின்றது.
இது குறித்து அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பலரும் தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ.) நடத்தி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கிறிஸ்டினா சாமியும் கரூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் தான்.
கிறிஸ்டினா சாமி மீது சில குற்றச்சாட்டுகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை சென்றதாகவும் அதனால் அந்த புகாரை வைத்து சிலர் அவரை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாகத் தான் அவர் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் அந்த புகார்கள் குறித்த முழு நிலவரம் இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பலரும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிய வருகின்றது.
ஆனால் தேர்தலில் போட்டியிட முன்வரும் நபர்களுக்கு தான் தலைமை வாய்ப்பு வழங்கும். அந்த வகையில் கிறிஸ்டினா சாமியை குறை சொல்ல முடியாது. ஆனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வாரா என்பதை இறுதி செய்யவில்லை. விரைவில் இது குறித்து தமிழ்நாடு தலைமை அறிவிக்கும் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications