வருணன் மனம் இரங்கி மழை வரணும்... கரூரில் ஒப்பாரி வைத்து வழிபட்ட பெண்கள்!
கரூர்: கரூரில் மழை பெய்ய வேண்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபட்ட நூதன சம்பவம் நடந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஒரு பகுதி நிலப்பரப்பில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் மூலம் விவசாயம் செய்யப்பட்டும் மற்றொரு பகுதியில் வானம் பார்த்த பூமியாக (மழை) மூலமாக விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கரூா் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் ஆறுகள் இல்லாத பகுதியான கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் மழையை நம்பிதான் விவசாயிகள் உள்ளனா்.

தொடர்ந்து மழை பெய்யாததால் ஆடுகள், மாடுகள் போன்ற விவசாயம் சார்ந்த கால்நடைகள் கூட தண்ணீரின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் வருந்துகிறார்கள்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி உடையாகுளத்துப்பட்டி கிராம மக்கள் மழைபெய்ய வேண்டி நூதன பிராத்தனை செய்தனா். கிராமத்தில் உள்ள சிறுமிகள் தலையில் மண்பானை சுமந்து வீடு வீடாக சென்ற ஒட்டுக்கஞ்சி எனப்படும் கஞ்சியை யாசகமாக பெற்று ஊரில் உள்ள பொதுஇடத்தில் பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து கதறி அழுதனா். பிறகு அப்பகுதியில் உள்ள விநாயகா். பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனா்.
தொடா்ந்து அந்த கஞ்சி சட்டியை உடைத்தனா். இதனால் வருணபகவான் மனம் இரங்கி மழையாக பெய்வார் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனா்.
தொடர்ந்து பல்வேறு பகுதியில் பெண்கள் நூதனமுறையில் மழை வேண்டி வழிபாடு செய்ததால் கரூா் மாவட்டத்தில் இன்று கரூா், கே.பி.குளம், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications