தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.. அண்ணாமலை சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்

மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்

வார்டன் சகாயமேரியை (62) ஏற்கனவே போலீஸார் கைது செய்தனர். மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாணவியின் சொந்த ஊரான வடுகபாளையத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பாஜக தேசிய மகளிர் அணித்தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

நீதி கிடைக்க வேண்டும்

நீதி கிடைக்க வேண்டும்

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும் என்று கூறினார். இந்த போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரான போராட்டமும் இல்லை என்று கூறிய அவர் மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் என தெரிவித்தார்.

 சிபிஐ விசாரணை வேண்டும்

சிபிஐ விசாரணை வேண்டும்

பா.ஜ., குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது என்று கூறிய அவர் இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர். இதற்குதன் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என கூறினார். ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பில்லாமல் பேசுவது நீதி கிடைக்குமா? என்றும் அண்ணாமலை சந்தேகம் எழுப்பினார்.

பொய் சொல்ல வாய்ப்பில்லை

பொய் சொல்ல வாய்ப்பில்லை

மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பாஜக தன்னுடைய குரலை கொடுத்து வருகின்றது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போராடி வருகிறோம் என்று தெரிவித்த அவர்
இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறு தான் என்றார்.

அரசு மோசமாக கையாண்டுள்ளது

அரசு மோசமாக கையாண்டுள்ளது

தமிழக அரசு இதனை மோசமாக கையாண்டுள்ளது. இதில் புலனாய்வு துறை தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை அற்புதமான காவல் துறைக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+