Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா..! பேராவூரணியில் 22 செ.மீ. மழை.. கொட்டித் தீர்த்த மழையால் மூழ்கிய பயிர்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருபத்தி இரண்டு சென்டிமீட்டர் வரை கொட்டி தீர்த்த கன மழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Recommended Video

    புதுக்கோட்டை: கொட்டித் தீர்த்த கனமழை… 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    கனமழை காரணமாக அறுவடைக்கு 15 நாட்களில் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் கனமழையால் வயலில் சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் கனமழை

    டெல்டா மாவட்டங்களில் கனமழை

    இந்த கனமழையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி பயிர்கள் சேதமடைந்துள்ளன இது மட்டுமல்லாது திருவாரூர் நாகை மயிலாடுதுறை சீர்காழி கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்த நெற்பயிர்கள் நிலக்கடலை உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.

    நெற்பயிர்கள் சேதம்

    நெற்பயிர்கள் சேதம்

    நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் வயலில் உள்ள நிலையில் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பள தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    கூடுதல் செலவு

    கூடுதல் செலவு

    கடந்த சில நாட்களாக தொடர் மழையால் சம்பா தாளடி இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் வெயில் அடித்ததால் விவசாயிகள் உரம் தெளித்தும் பூச்சிமருந்து கொடுத்தும் பயிர்களை காப்பாற்றி வந்த நிலையில் இந்த மழையால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது எனவும் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் பூச்சிமருந்து உள்ளிட்டவற்றுக்கு கூடுதலாக ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு ஆனதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

    நிவாரணம் வழங்க கோரிக்கை

    நிவாரணம் வழங்க கோரிக்கை

    தற்போது பெய்த கனமழை காரணமாக விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு அதிகாரிகளைக் கொண்டு உரிய ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+