ஃபுட் அலர்ஜி! டிடிவி தினகரன் உடல்நிலை சீராக உள்ளது! தஞ்சை மீனாட்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
தஞ்சை: உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது என தஞ்சை மீனாட்சி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமமுக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான டிடிவி தினகரன் இன்று காலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூரில் உள்ள மினாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்கானிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

டிடிவி தினகரன்
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே தான் நாலமாக இருப்பதாக டிடிவி தினகரன் கூறினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

மருத்துவப் பரிசோதனை
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

உணவு ஒவ்வாமை
இந்நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது என தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மீனாட்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன் நேற்று வயிற்றுவலி, வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் அனுமதிக்கப்பட்டார்.

நீராக உள்ளது
தேவையான பரிசோதனைகள் முடிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது உடல் நிலை சீராக உள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். அத்துடன் அவரது உடல்நிலை மருத்துவ குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டிடிவி தினகரனை சந்திக்க தொண்டர்கள் மருத்துவவமனையில் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications